திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த எம்.எல்.ஏ.,விடம் மனு
திருமுக்கூடல், செப். 18– திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் கொடி மரம் அமைத்து மஹா
திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் கொடி மரம் அமைத்து மஹா கும்பாபிஷேகம் நடத்தக்கோரி, த.வெ.க., – எம்.எல்.ஏ., முனிரத்திவிடம், அப் பகுதி மக்கள் நேற்று மனு அளித்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஐந்து உத்சவங்கள் நடைபெறுகின்றன.
இதற்கு முன், இக்கோவிலில், 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கோவில் மூலஸ்தானத்தின் விமான கோபுரம் மற்றும் கொடி மரம் சேதமடைந்துள்ளது.
