நீலப்புரட்சி, வாய்ப்புகளின் பெருங்கடல்!
- சி.பி.ராதாகிருஷ்ணன் - துணை ஜனாதிபதிநம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட
நம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, கடந்த 12 ஆண்டுகளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நலிந்த, பின்தங்கிய பிரிவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.
பிரதமரின் அணுகுமுறை எல்லோருக்கும் முன்மாதிரியானது. நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களை, வளர்ச்சிக்கான ஆர்வமுள்ள மாவட்டங்களாக அறிவித்ததும், எல்லையோர கிராமங்களை 'துடிப்பான மற்றும் முதன்மையான கிராமங்கள்' என்று அறிவித்ததும், வடகிழக்கு பிராந்தியத்தை 'அஷ்டலட்சுமி' என்று குறிப்பிட்டதும் ஓர் உணர்வுப் பூர்வமான பாரத தேசத்தின் மீதான மாறுபட்ட பார்வைக்கும், அணுகுமுறைக்கும், ஒற்றுமைக்கும் அற்புதமான உதாரணமாக திகழ்கிறது.
இந்த அணுகுமுறை, பின்தங்கிய பகுதிகளாக இருந்த பிராந்தியங்களை முக்கியத்துவம் வா ய்ந்ததாகவும், முன்னேறுகின்ற பகுதிகளாகவும், வளர்ச்சிக்கான முனைப்பை கொண்ட பகுதிகளாகவும் மாற்றியுள்ளது. இதனால், 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உன்னத இலக்கு எல்லா தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய வெற்றிகரமான, ப யணமாக அமைகிறது.


