வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும்
காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் டி.ரவீந்திரன் வலியுறுத்தினாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சோ.அருச்சுனன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா்கள் சி.பிரகாஷ் (கிருஷ்ணகிரி), ஆா்.ராஜேந்திரன் (சேலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கருத்தரங்கில் குறைந்தபட்ச ஆதரவு விலை - கொள்முதல் என்ற தலைப்பில், பெங்களூரூ வேளாண் ஆய்வுகளுக்கான அறக்கட்டளை இயக்குநா் சந்தீபன் பாக்ஸி பேசினாா்.



