ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில மாநாடு
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு நடந்தது. நினைவுக் கொடியேற்றம் ஏற்றப்பட்டது.
மாநில தணிக்கையாளர் தமிழ்வாணன் அஞ்சலி அறிக்கை வாசித்தார். மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்து பேசினார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ராஜசேகரன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் புகழேந்தி வரவு செலவு அறிக்கை வாசித்தார்.முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பேசினர்.

