சேதம் அடைந்த பாலாறு மேம்பாலம் விபத்து :அபாயத்தில் வாகன ஓட்டிகள்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாறு மேம்பாலம் சேதமடைந்துள்ளதால்,. வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வுருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக செவிலிமேடு பாலாறு மேம்பாலம் உள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றன.
முறையான பராமரிப்பு இல்லாததால், மேம்பாலத்தின் இணைப்புப் பகுதிகள் மற்றும் பல இடங்கள் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.


