ஒரு ஏக்கர்... பாரம்பர்ய நெல் ரகங்கள்... 60 ஆயிரம் ரூபாய் லாபம்!
சன்ன ரகங்களில் கதிர் விடும்போது, குருத்துப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமா இருக்கும். அதுக்கு பூச்சி விரட்டியெல்லாம் தெளிக்கிறதில்ல.
நேரடி விற்பனை... நிறைவான வருமானம்!
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் பலரும் வீரிய ரகங்களைத் தவிர்த்து... பாரம்பர்ய ரகங்களைத் தேடிப்பிடித்துச் சாகுபடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி பாரம்பர்ய ரகங்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகளை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, `பசுமை விகடன்'. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இளையராஜாவின் பாரம்பர்ய நெல் சாகுபடி குறித்து இந்த இதழில் பார்ப்போம். இவர் தனது வயலில் பலவிதமான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து விதை நெல்லாகவும், அரிசியாக மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளாகம் கிராமத்தில் இருக்கிற இளைய ராஜாவின் வயலில் அவரை சந்தித்துப் பேசினோம். ``நான் வேதியியலில் முதுகலை முடிச்சுட்டு ஒரு சோலார் பேனல் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநரா வேலை பார்க்கிறேன். அப்பாதான் பல வருஷங்களா விவசாயம் பார்த்துட்டிருந்தார். அவர் இறந்த பிறகு, அம்மாவும் அண்ணன் களும் விவசாயத்தை பார்த்துக்கிட்டாங்க. நானும் நேரம்கிடைக்கும்போதெல்லாம் வயலில் வேலை செய்ய ஆரம்பிச்சுடுவேன்.



