ஐஎஸ்ஐ தொடர்புடைய ஷெசாத் பட்டி குழு பயங்கரவாத அமைப்பு; உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடில்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஷெசாத் பட்டி குழுவை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன் ஷெசாத் பட்டி. பாக்.ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்த இவன், தன்னை சமூகவலை தள பிரபலமாக முன்னிறுத்தியவன். அதன் வாயிலாக இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தமது குழுவில் இணைக்கும் வேலைகளை செய்து வருபவன்.
சுதந்திர தினத்தின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த ஷெசாத் பட்டி திட்டமிட்டதை கண்டுபிடித்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆக.12ம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை நடத்த உத்தரவிட்டது.

