தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பதவி 110 ஆக உயர்வு : திட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரும் தொண்டர்கள்!
தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 77லிருந்து 110ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். மற்ற அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுபோன்ற திட்டங்கள் எந்த கட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை. மா.செ. பதவி 3 முறை மட்டுமே, மற்ற பிற கட்சி பதவிகள் 2 வருடம் என நிர்ணயித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் கட்சியில் இளைஞர்களும் பிற இளைஞர்களும் தங்களுக்கும் எப்போதாவது தி.மு.க.வில் பொறுப்பு கிடைக்கும். ஆளுமைத் திறனும் வரும். என்று தீர்மானமான முடிவில் இருக்கிறார்களாம். இதனால் கட்சியில் இளைஞர்கள் புதியவர்கள் சேர வாய்ப்புள்ளது. இதுபோன்ற தீர்மானம் வேறு எந்தக் கட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை, கொண்டு வரப்படவுமில்லை. தி.மு.க.வின் தலைமை இத்தீர்மானத்தை நிறைவேற்றினால் தி.மு.க. புத்துணர்ச்சி பெறும். கட்சியில் இணைந்தவர்கள் பரபரப்பாகவே செயல்படுவார்கள். கட்சி துடிப்புடன் இருக்கும். முந்தைய திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போனதால் அதைப்போன்று பிறரின் அழுத்தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் இருக்கக்கூடாது என்கிறார்கள் தி.மு.க.வினர். மேலும் இத்திட்டங்கள் எந்த வழியிலாவது நிறைவேறும் என்று ஏக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள்.
தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆக. 22ன்டில் நடந்தது. மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்க பொது செ. துரைமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செ. கே.என்.நேரு, துணைச் செ.க்கள் கனிமொழி, பொன்முடி, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மா.செ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
