தேங்கியது மழை நீர் வாகனங்கள் திணறல்
உடுமலை: உடுமலை அருகே, நான்கு வழிச்சாலை திட்ட வடிவமைப்பு குளறுபடி காரணமாக, மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதித்தது.
பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மைவாடி பாலம், உடுமலை – தாராபுரம் ரோடு சந்திப்பு, திருப்பூர் ரோடு சந்திப்பு பகுதிகளில் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
இந்நிலையில், உடுமலையிலிருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில், இணைப்பு ரோடுகள் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா உள்ளிட்ட பணிகள் நிலுவை உள்ளது.



