மஞ்சள் அரைத்து வழிபட்டால் மனமிறங்கும் அம்மன்..! ராமேஸ்வரத்தை காக்கும் நம்பு நாயகி அம்மன் கோவில் சிறப்புகள்....
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள நம்பு நாயகி அம்மன் கோவிலில் பக்தர்கள் விரலி மஞ்சள் அரைத்து வேண்டும் வினோத வழிபாட்டு முறை வழக்கத்தில் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் புதுரோடு என்னும் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் வனப்பகுதிக்குள் நம்பு நாயகி அம்மன் கோவிலானது அமைந்துள்ளது.
இக்கோவிலானது ராமேஸ்வரத்தில் வாழும் பலருக்கு குலதெய்வமாகவும், ராமேஸ்வரத்தில் காக்கும் காவல் பெண் தெய்வங்களில் தெற்கில் அமைந்துள்ள காவல் தெய்வமாகவும் போற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் உள்ளது.



