அரசு பள்ளிகளில் வகுப்புகள் தடையின்றி நடக்க காணொலி மூலம் கற்பித்தல் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் காணொலி வாயிலாக வகுப்புகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம், வணிகவியல், கணக்கு பதிவியல் பாடங்களை கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வணிகவியல் பாடப்பிரிவு தொடர்ந்து செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
வணிகவியல் பிளஸ் 1 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாறும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.




