எட்டு மணி நேரத்திற்கு மின் வெட்டு ஆவடி, திருவொற்றியூர் மக்கள் தவிப்பு
ஆவடி: தனியார் காஸ் குழாய் பதிப்பு பணியால், புதைவட கேபிள் அறுந்ததால், பருத்திப்பட்டு, கோவர்தனகிரி, சின்னம்மன் கோவில் பகுதிகளில், எட்டு மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு ஏற்பட்டது. அதேபோல் திருவொற்றியூரிலும் மின் வெட்டு ஏற்பட்டதால், பகுதிமக்கள் அவதியடைந்தனர்.
ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ‘டோரண்ட்’ காஸ் குழாய் பதிக்கும் பணி, ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்த பணியின்போது புதைவட மின் கேபிள், அடிக்கடி சேதமடைகிறது.
இந்நிலையில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் மின் கேபிள் சேதமடைந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு, பருத்திப்பட்டு, கோவர்தனகிரி சுற்றுவட்டார பகுதிகளில், இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


