திருப்பதி திருக்குடைகளுக்கு திருவள்ளூரில் வரவேற்பு
கடம்பத்துர்: ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், திருப்பதி பிரம்மோத்சவத்திற்காக திருப்பதி கொண்டு செல்லப்படும் திருக்குடைகளுக்கு, திருவள்ளூர் பகுதியில் நேற்று பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோத்சவத்திற்காக, ‘ஹிந்து தர்மார்த்த ஸமிதி’ சார்பில், 22வது ஆண்டு திருக்குடை உத்சவ ஊர்வலம், கடந்த 13ம் தேதி தொடங்கியது.
சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் நடந்த தொடக்க விழாவில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி முன்னிலையில், கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளி ஸ்ரீபீமன்னகட்டே மடத்தின் பீடாதிபதி ஸ்ரீரகுவேந்திரா தீர்த்த சுவாமிகள் கொடியசைத்து, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.


