அரசு மருத்துவமனையில் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் தவிப்பு கலெக்டர் தலையிட்டும் தீராத பிரச்னை
கம்பம்: சின்னமனூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கட்டிய புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறுவதில் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் தலையிட்டும் பிரச்னை தீரவில்லையே என மருத்துவமனை பணியாளர்கள் புலம்புகின்றனர்.
சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சின்னமனூர் மட்டுமின்றி சுற்றி உள்ள 30 கிராம பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மேகமலை பகுதியில் உள்ள 7 மலைக் கிராம மக்களும் இம் மருத்துவமனையை நம்பி உள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் 15 வது நிதிக் குழு மானியத்தில் ரூ.3.50 கோடியில் இம் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது.
மின் இணைப்பு வழங்க மறுப்பு இது போன்ற கட்டடங்களை பொதுப்பணித் துறையின் கட்டட பிரிவு கட்டும். ஆனால் இக் கட்டடத்தை சின்னமனூர் நகராட்சி கட்டியது.
