"பேசக் கூடாது... கேட்கக் கூடாது" - தலைவர்களின் துறவற அரசியல்
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். `எதற்காகக் கட்சி ஆரம்பித்தீர்கள்?’ என்று கேட்கத் தடை.
தமிழக அரசியலில் என்ன நிகழ்வு நடந்தாலும், உடனடியாக எதிர்வினையாற்றும் மருத்துவர் ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொள்வதாகச் சமீபத்தில் அறிவித்தார். அதோடு, தன்னைச் சந்திக்க வருபவர்கள், ‘அரசியல் பேச வேண்டாம்' என்ற நிபந்தனையுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு முன்னால் அவர் சார்பில் வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ‘அரசியலே பேசக் கூடாது என்றால், பிறகு எதற்குப் பார்வையாளர் நேரம்?' என நெட்டிசன்களும் வறுத்தெடுத்தனர். இந்த நிலையில், `அவரைப்போல சில அரசியல் தலைவர்கள் துறவறம் மேற்கொண்டால் எந்த விஷயத்தைத் துறப்பார்கள்... என்ன நிபந்தனை விதிப்பார்கள்?’ எனக் கற்பனைக் குதிரையை ஓடவிட்டோம்.
விஜய் எதிர்க்கட்சிகள் கேட்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து துறவறம். நிபந்தனை: ஆட்சியின் சட்டம்- ஒழுங்கு குறித்து பேசக் கூடாது.


