புத்துார் மலைப்பகுதியில் வறட்சி: நீருக்காக தரையிறங்கும் காட்டுமாடுகள்
வடமதுரை:வடமதுரை அருகே மலைகளில் ஏற்பட்டுள்ள வறட்சியால் தண்ணீருக்கு தவிக்கும் காட்டுமாடுகள் கிராமங்களுக்குள் வருகின்றன.
புத்துார் முடிமலை, பண்ணமலை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுமாடுகள் வாழ்கின்றன. தற்போது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் நீருற்றுகள் அனைத்தும் வறண்டுள்ளன. இதனால் காட்டுமாடுகள் நீர், உணவு தேடி மலைப்பகுதியை ஒட்டிய விவசாய தோட்டங்களை தேடி தரை இறங்குகின்றன. இவ்வாறு வரும் காட்டுமாடுகளை விரட்ட முயலும் பொதுமக்கள் தாக்கப்படுவதும் உண்டு.
நேற்று முன்தினம் ஏராளமான காட்டு மாடுகள் குருந்தம்பட்டி பகுதி விளை நிலங்களுக்குள் புகுந்தன. கிராமத்தினரே சிரமப்பட்டு விரட்டி மலைப்பகுதிக்கு திருப்பிவிட்டனர்.
