என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் 2 வாரம் கெடு
- சிறப்பு நிருபர் -: என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் 2 வாரம் கெடு விதித்து
என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் மற்றும் உபா எனப்படும், தேசவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டங்களின் கீழ் பதிவாகும் வழக்குகளை, காலக்கெடுவுக்குள் விசாரித்து முடிக்க, தனி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. நாடு முழுதும் இதுவரை, 22 பிரத்யேக என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், இதற்கான பணிகளில் தாமதம் நிலவுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
