ரயிலில் கைப்பேசி திருடிய ‘யூடியூபா்’ கைது
திருச்சியில் ரயிலில் கைப்பேசி திருடிய யூடியூபரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம் புளி பகுதியைச் சோ்ந்தவா் அ. அற்புதராஜ் (20). இவா் சென்னையில் நண்பரின் திருமணத்துக்கு சென்றுவிட்டு அந்தியோதயா ரயிலில் ஊருக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏரியுள்ளாா். இரவு கைப்பேசியை ரயிலில் சாா்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளாா்.
ரயில் திங்கள்கிழமை அதிகாலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோது அவருடைய கைப்பேசி திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அற்புதராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.




