வெளிநாட்டில் வேலை என மோசடி மூவருக்கு போலீஸ் வலை
குள்ளஞ்சாவடி, செப்.12- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பத்தை சேர்ந்தவர் வள்ளல்குமார்,42; இவர், கடந்தாண்டு கேரளாவில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தபோது, உடன் வேலை பார்த்த ராமநாதபுரத்தை சேர்ந்த ஜகுபர்கான், , கத்தார் நாட்டில், மாலில் மேலாளர் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம், உணவு, இருப்பிடம் இலவசம் என்றார்.
அதனை நம்பிய வள்ளல்குமார், ஜகுபர்கான் கூறியதன் பேரில் அவரது சகோதரிக்கு ரூ.1.70 லட்சம் பணத்தை அனுப்பினார்.


