20 நாளுக்கு முன் அமைத்த தார் சாலை நாசம்: மாநகராட்சி மீது மக்கள் அதிருப்தி
செம்பாக்கம்: குரோம்பேட்டை நெமிலிச்சேரியில், 20 நாட்களுக்கு முன் அமைத்த தார் சாலையை தோண்டி, அப்பகுதியில் சிறுபாலம் கட்டும் மாநகராட்சி அதிகாரிகளின் செயலால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, நெமிலிச்சேரியில், கண்ணம்மாள் நகர் உள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உடைய இப்பகுதி நேரு தெருவில், 20 நாட்களுக்கு முன், மாநகராட்சி நிர்வாகம் தார் சாலை அமைத்தது.
இந்நிலையில், பிள்ளையார் கோவில் பூங்கா அருகே, நேரு மற்றும் வாஞ்சிநாதன் தெருக்கள் சந்திப்பில் சிறுபாலம் கட்டுமான பணிக்காக, புதிதாக போடப்பட்ட சாலையை தோண்டி, பள்ளம் எடுக்கப்பட்டு உள்ளது

