10 வரை படிப்பு, 25 பெண்களுக்கு வாழ்வாதாரம்... காரைக்குடி ‘அக்கா மீன் சாப்பாடு’ கடை... அசத்தும் தீபா!
‘`இன்னிக்கு சோஷியல் மீடியா விளம்பரங்கள் மூலமா எங்கக் கடை தமிழ்நாட்டோட பல பகுதிகளுக்கும், ஏன் வெளிநாடுகள்ல இருக்குற வங்களுக்குக்கூடத் தெரியவந்திருக்கு. ஆரம்பத் துல கேமரா முன்னாடி நிக்கவே பயந்தேன்.
காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள ‘அக்கா மீன் சாப்பாடு’ கடைக்குள் நுழைந்ததும் மீன் வறுவலின் வாசம் நாசியைத் துளைக்கிறது. வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகிறது கடை. பரபரப்பான சமையல் பணிக் கிடையில், இன்முகத்துடன் வாடிக்கையாளர்களை உபசரித்துக்கொண்டிருந்தார் தீபா. அங்கு வேலை பார்க்கும் பெண்களும் அன்போடு உணவைப் பரிமாறிக் கொண்டிருந் தனர். பரபரப்பு ஓயும்வரை காத்திருந்து தீபாவிடம் பேசினோம்.
“ என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை கிராமம். பத்தாவது வரை படிச்சிருக்கேன். 2007-ம் வருஷம், திருமணமான நிலையில கிராமத்துலேருந்து நாங்க காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தோம். ஆரம்பத்துல என்ன பண்ணணும், எப்படி வாழ்க்கையை நடத்தணும்னு எதுவுமே தெரியல. ‘நமக்குதான் டெய்லரிங் தெரியுமே, அதை ஏன் ஒரு தொழிலா ஆரம்பிக்கக் கூடாது’ன்னு ஒருநாள் தோணுச்சு. அழகப்பா பல்கலைக்கழகத்துல டெய்லரிங் கோர்ஸ்ல சேர்ந்தேன். ‘பெஸ்ட் ஸ்டூடென்ட்’ என்ற பெயரையும் வாங்கினேன். அப்புறம் சொந்தமா ‘எம்எம் என்டர்பிரைசஸ்’ என்ற பெயர்ல டெய் லரிங் இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சு, வகுப்புகள் எடுத்திட்டிருந்தேன்...’’


