பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: ஊராட்சி செயலர்கள் எதிர்பார்ப்பு
வாலாஜாபாத்:பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, ஊராட்சி செயலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி தோறும் தலா ஒரு ஊராட்சிக்கு ஒரு செயலர் என நியமனம் செய்து பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஊராட்சி வளர்ச்சி பணிகள் கண்காணித்தல், வரி இனங்கள் வசூல், வரவு - செலவு கணக்குகள் பராமரித்தல்,குடிநீர், சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


