பெருங்குடி குப்பை கிடங்கால் பல்லாவரம் ரேடியல் சாலைக்கு...பேராபத்து! : வடிகால்களை அடைத்ததால் தென் சென்னைக்கு வெள்ள அபாயம்
சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் மட்கி மண்ணான குப்பை கழிவுகள், தினமும் 5 அடி வீதம் சரிந்து, பல்லாவரம் ரேடியல் சாலையில் தேங்கி வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சரியும் கழிவுகளை தடுக்க முடியாமல் மாநகராட்சி திணறி வரும் நிலையில், மூன்று நீர்வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தென் சென்னைக்கு வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 9 முதல் 15 வரையுள்ள ஏழு மண்டலங்களில் தினமும் 2,700 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன.
இவை, பல்லாவரம் - ரேடியல் சாலையை ஒட்டி 220 ஏக்கர் பரப்பு உடைய பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.


