பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிவால் தீ விபத்து
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று காலை பள்ளி சத்துணவு கூடத்தில் வழக்கம்போல் சமையல் பணி நடந்தது. அப்போது சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு காஸ் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது.
இதனால் அடுப்பு முழுவதும் தீ பரவிய நிலையில், சமையலர் மற்றும் உதவியாளர் அலறி அடித்து வெளியேறினர். தீயணைப்பு வாகனம் வர தாமதம் ஏற்பட்டது.

