லஞ்சம் -சிக்கிய திமிங்கலங்கள்!
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பிரதாப். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டியில் கிரஷர் ஆலை நடத்திவருகிறார். ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதிவேண்டி, ஓசூரிலுள்ள மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவல கத்தில் விண்ணப்பித்தார்.
அங்கு மாவட்டப் பொறியாளராக பணியாற்றி வந்த புருசோத்தமன், அனுமதி சான்றிதழ் (சி.டி.இ.) தருவதற்கு ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியாக 10 லட்ச ரூபாய்க்கு ஒப்புக்கொண்டுள்ளார். முதல்கட்டமாக 3 லட்ச ரூபாய் தருவதாகவும், அனுமதி சான்றிதழ் கைக்கு வந்தபிறகு மீதப்பணத்தைத் தருவதாகவும் பிரதாப் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ஜெய்குமாரிடம் புகாரளித்தார். இதையடுத்து செப். 2-ஆம் தேதி, ரசாயன பவுடர் தடவிய 3 லட்ச ரூபாயை பிரதாப்பிடம் கொடுத்தனுப்பினர். பொறியாளர் புருசோத்தமன், மாமூல் வசூலுக்கென்று சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவக்குமாரை இடைத்தரகராகப் பயன்படுத்திவந்துள்ளார். அதனால் பணத்தை சிவக் குமாரிடம் கொடுத்துவிடும் படி பிரதாப்பிடம் கூறியிருக்கிறார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
