புரட்டாசியில் அவசியம் தரிசிக்கவேண்டிய 5 பெருமாள்கள்!
புண்ணிய புரட்டாசியில் பெருமாள் கோயில்களை தரிசிப்பது மிகவும் விசேஷம். நாம் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி ஈடேற பெருமாள் தரிசனம் அருள்புரியும். அவ்வகையில் தமிழகத்தின் மிக அற்புதமான 5 பெருமாள் கோயில்களின் மகிமைகள் உங்களுக்காக!
நான்கு திவ்யதேசங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்!
தலச்சிறப்பு: தேன்கனிக்கோட்டை - வேட்டையாடும் கோலத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் தலம். அத்ரிமுனிவரின் சாபத்துக்கு ஆளான தேவகண்டன் என்ற யக்ஷன் புலியாக மாறினான். பிற்காலத்தில் கண்வ மகரிஷியின் தவத்துக்கும் இடையூறுகள் செய்தான். கண்வ மகரிஷி திருப்பதி பெருமாளைச் சரணடைந்தார்.



