7.8% ஆக அதிகரித்த ஜி.டி.பி..! - ரீல் வளர்ச்சியா... ரியல் வளர்ச்சியா?
, “ஜி.டி.பி வளர்ச்சி 7.8 சதவிகிதம் என்பது உண்மை கிடையாது” என்று சொல்லி பா.ஜ.க-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தார் மோடி அரசில் நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க்.
“இந்தியாவின் ஜி.டி.பி 7.8 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது” என்ற செய்தி பா.ஜ.க-வினரை புளகாங்கிதமடையச் செய்திருக்கிறது. அதேநேரம், “இது மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரம்” என்றும், “உண்மையான வளர்ச்சி விகிதம் 2.6 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும்” என்றும் முன்வைக்கப்படும் விமர்சனம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
“நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 7.8 சதவிகிதமாக இருந்தது” என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. உடனே, “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சம் பெற்றுவிட்டது” என்று பா.ஜ.க-வினர் துள்ளிக் குதித்தனர்.


