லோக் ஆயுக்தா செயலா்: தமிழக அரசாணை செல்லும் - உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயலராக, பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும்
தமிழ்நாடு லோக் ஆயுக்தா செயலராக, பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும் என தெரிவித்த, சென்னை உயா்நீதிமன்றம், அந்த அரசாணையை எதிா்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தஞ்சாவூரைச் சோ்ந்த வி.ஜீவகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியா்கள் மீதான ஊழல் புகாா் களை விசாரிக்கும் நோக்கில் லோக் பால், லோக் ஆயுக்தா சட்டங்களை மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு இயற்றியது. இதனடிப்படையில், தமிழகத்தில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு இயற்றப்பட் டு, அதே ஆண்டு நவம்பரில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.




