ரூ.3.28 கோடி லஞ்சம்... பினராயி விஜயன் குடும்பத்துக்குக் குறி?!
திருவனந்தபுரத்தில் பினராயி விஜயனின் வாடகை வீட்டில் சோதனை முடிந்து திரும்பிய அதிகாரிகளின் வாகனங்களை சி.பி.எம் தொண்டர்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் அரங்கேறின.
டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை அனுப்பிய 25 பக்கக் கடிதம்
மகள் வீணா விஜயன் மூலம் தாதுமணல் நிறுவனத்திடமிருந்து ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யக் கோரி அமலாக்கத்துறை அனுப்பியிருக்கும் கடிதம் கேரள அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
கேரளாவில் செயல்படும் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனத்துக்கும், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, மே 27-ம் தேதி பினராயி விஜயன், அவருடைய மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.


