சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலம் துவங்கியது: முன்னெச்சரிக்கை பணி எப்போது
இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக மழைக்காலத்திற்கான அறிகுறியாக மழை பெய்து வருவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நீண்ட நாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், ஈரப்பதத்தை பயன்படுத்தி பல்வேறு பயிர்களுக்கான விதைப்பு மற்றும் உழவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், கிராமங்கள் மற்றும் நகர்ப் புறங்களில் மழைநீர் தேங்குவதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், சாலைகளில் சேறும் சகதியுமாக மாறுதல், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலைகளில் வழிந் தோடுதல் போன்ற பிரச்னை ஏற்படக்கூடும்.

