பாலாற்றில் நீர் எடுக்க மாநகராட்சிக்கு அரசு அனுமதி தாகம் தீரும்!மக்களுக்கு இனி தடையின்றி குடிநீர் வினியோகம்
காஞ்சிபுரம்:நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கொள்ள, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, தமிழக அரசின் நீர்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, காஞ்சிபுரம் மக்களுக்கு பாலாறு குடிநீர் தடையின்றி கிடைக்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், 32,687 குடிநீர் இணைப்புகள் உள்ளன.
மாநகர மக்களுக்கு திருப்பாற்கடல், ஓரிக்கை ஆகிய பாலாறு திட்டங்கள் மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


