விவசாய நிலத்தில் காப்பர் ஒயர் திருடியவர் கைது
மயிலம்: மயிலம் அருகே விவசாய நிலத்திலிருந்து காப்பர் ஒயர் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த தென் களவாய் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து 46; விவசாயி. இவர் தனது நிலத்தில் உள்ள மோட்டார் செட்டில், 4 ஸ்டார்ட்டர்கள், மற்றும் 50 மீ., காப்பர் ஒயர் ஆகியவற்றை திருடி கொண்டு நேற்று முன்தினம் 3 பேர் பைக்கில் வேகமாக சென்றனர்.
இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக பைக்கில் சென்ற மூவரையும் மடக்கி பிடித்து மயிலம் போலீசில் ஒப்படைத்தனர்.

