பண்டிகையிலும் அரசியலா?
'திருவிழா, பண்டிகைகள் எல்லாம் இப்போது அரசியல் களங்களாக மாறி விட்டன...' என வருத்தப் படுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், முதல் முறையாக இப்போது தான் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. இதனால், பா.ஜ.,வில் சுவேந்து அதிகாரியின், 'மவுசு' அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், ஆண்டுதோறும் நடக்கும் தசரா துர்கா பூஜை மிகவும் பிரசித்தம். மாநிலம் முழுதும் துர்கா தேவி சிலைகளை வைத்து, 10 நாட்கள் பூஜை செய்து, பின் நீர்நிலைகளில் கரைப்பர். இதற்காக, மாநிலம் முழுதும் ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம்.


