"முறிந்த காலுடன் 7000 அடி மலையில் ஏறினேன்" - ஈரானில் சிக்கி 50 மணிநேரம் போராடி தப்பிய அமெரிக்க வீரர்
A US soldier has shared his experience of how he survived—remaining in hiding for 50 hours—after falling into Iranian territory from a plane damaged by a missile during an attack on Iran.
ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஏவுகணை பட்டு சேதம் அடைந்த விமானத்தில் இருந்து ஈரானுக்குள் விழுந்து 50 மணி நேரம் தலைமறைவாக இருந்து தப்பியது எப்படி என்பது குறித்து அமெரிக்க வீரர் தனது அனுபவத்தைக் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி அமெரிக்க விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த இரண்டு பேரும் ஈரானுக்குள் உயிரோடு விழுந்தனர்.
அவர்களில் பைலட்டான அல்பா என்பவர் அடுத்த சில மணி நேரத்தில் அமெரிக்கப் படையால் மீட்கப்பட்டுவிட்டார். ஆனால் ஆயுதங்களைக் கையாளக்கூடிய மற்றொரு அதிகாரியான பிராவோவை உடனே மீட்க முடியவில்லை.


