22 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை
செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டசபை தனி தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் அக்., 6ம் தேதி நடக்கிறது. இதில், 22 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன.
படாளம், மேலவலம், பகுதிகளில் செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் நேற்று ஆய்வு செய்தார். ஓட்டுச்சாவடிகளில், அடிப்படை வசதிகள் செய்து தர, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


