தொழில் பங்கீட்டாளராக இணைய விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் இணைய சேவை வழங்கும் 'டேன்பி நெட்'டில் தொழில் பங்கீட்டாளராக இணைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களுக்கு உயர்தர இணைய சேவையை வழங்குவதற்காக மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை 'டேன்பி நெட்' (தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்) முன்னெடுத்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சமாக 2 தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்தில் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 ஒன்றியங்களை கொண்ட துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த துணை பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

