ஆலங்காயத்தில் கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை: காதலுனுடன் தாய் கைது
ஆலங்காயத்தில் கிணற்றில் 2 குழந்தைகளை வீசி கொலை செய்த வழக்கில் காதலுடன் தாய் கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட சிவகாமி, ராஜா.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பகுதியை சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி இரண்டு குழந்தைகள் சடலமாக இருப்பது கண்டறிந்து மீட்கப்பட்டது. இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.


