காஞ்சிபுரத்தில் கலங்கலாக வரும் குடிநீர்
காஞ்சிபுரம், செப். 13– காஞ்சிபுரம் மாநகராட்சி பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில், ஒரு மாதமாக குழாய் தண்ணீர்
காஞ்சிபுரம் மாநகராட்சி பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில், ஒரு மாதமாக குழாய் தண்ணீர் கலங்கலாக பழுப்பு நிறத்தில் வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, குறுக்கு சாலைகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு 1 மாதமாக வீட்டு குழாய்களில் 20 – 30 நிமிடங்கள் மட்டுமே தண்ணீர் வருகிறது.
அதுவும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுப்பு நிறத்தில், கலங்கலாக, அசுத்தமாக வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

