ஸ்ரீரங்கம் கோவில் நிலம் பதிவுக்கு தடை தொடரும்: ஐகோர்ட் உத்தரவு
மதுரை: 'திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அறப்பணி செய்ய ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பாக, எவ்வித ஆவணத்தையும் பதிவு செய்யக்கூடாது என பிறப்பித்த இடைக்கால தடை தொடரும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், நெடுங்குளம் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'திருச்சி, ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரத்தில், 21 ஏக்கர் 6 சென்ட் நிலம் ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது.
இது, ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் அறப்பணி மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. சிலர் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தினை அபகரிக்க முயற்சிக்கின்றனர்' என, குறிப்பிட்டார்.




