“சன்ன ரக நெல்லுக்கு நிகராக மோட்டா ரகத்துக்கும் விலை வேண்டும்!”
உழவு, அடியுரம், மேலுரம், களையெடுப்பு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அறு வடை ஆகியவற்றுக்கான செலவுகள்... இந்த இரண்டு ரகங்களுக்குமே ஒன்றுதான்
விவசாயிகள் கோரிக்கை!
கடந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், போதுமான அளவுக்கு மழைப் பொழிவு இருந்ததாலும்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடிப் பட்ட நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இல்லாததால், டெல்டா பாசனத்துக்குக் காவிரி நீர் திறப்பு, இரண்டரை மாதங்களுக்கும் மேலாகத் தாமதமாகியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். `குறுவைச் சாகுபடி கைவிடப்பட்ட நிலையில் சம்பா மற்றும் தாளடியாவது கை கொடுக்குமா?' என்ற கவலையில் உள்ளனர், விவசாயிகள்.
இந்த நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடிப் பட்ட நெல் சாகுபடிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் விவ சாயிகள், தமிழக அரசுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.






