நியூஸ் பாக்ஸ்!
‘எதற்காக இந்த யாகம், பரிகார பூஜை?’ என சத்தியபாமாவுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, அவர்கள் புதுக்கதை சொன்னார்கள்.
ரூ.4 கோடி மோசடிப் புகார் சிக்கலில் சி.விஜயபாஸ்கர்..!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர் தன.விமல். தேர்தல் செலவுக்கான நிதி ரூ.5 கோடியைக் காட்டுமாறு, அன்றைய
அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் கேட்டதாகக் கூறப்படுகிறது. `வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு பணம் திருப்பித் தரப்படும்’ என்ற வாக்குறுதியை நம்பி, 11.03.2026 அன்று ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசனின் அலுவலகத்தில்வைத்து ரூ.4.5 கோடியை தன.விமல் கொடுத்திருக்கிறார். ஆனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே தந்த விஜயபாஸ்கர் எஞ்சிய ரூ.4 கோடியைத் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டுகிறார் தன.விமல். அது மட்டுமின்றி, தன் தந்தைக்குச் சொந்தமான இடத்துக்கான ஆவணங்களை வாங்கிய விஜயபாஸ்கர், தன் ஆதரவாளர் ஒருவரிடம் அடமானம்வைத்து ரூ. 10 லட்சம் தருவதாகக் கூறியவரிடமிருந்து பணமும் வரவில்லை, ஆவணத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறார். இது பற்றி காவல்துறையில் புகாரளித்தும் வழக்கு பதிவுசெய்யாததால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி டி.எஸ்.பி பிருந்தா விசாரணை மேற்கொண்டதில், பணப் பரிவர்த்தனை ஆவணங்கள், தொலைபேசி உரையாடல் ஆடியோ பதிவுகளை தன.விமல் ஒப்படைத்திருக்கிறார். விஜயபாஸ்கர் தற்போது த.வெ.க-வில் இணைந்து புதுகோட்டை அமைப்புச் செயலாளராக இருக்கும் நிலையில், காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.



