மாமல்லையில் தனி தனி கட்டணங்கள் வசூலிப்பதால் பயணியர் குழப்பம்
மாமல்லபுரம், செப். 10– மாமல்லபுரத்தில், பாரம்பரிய சின்ன வளாகத்தில் தொல்லியல்துறை, கலங்கரை விளக்கம் என,
மாமல்லபுரத்தில், பாரம்பரிய சின்ன வளாகத்தில் தொல்லியல்துறை, கலங்கரை விளக்கம் என, வெவ்வேறாக வசூலிக்கப்படும் கட்டணங்களால், பயணியர் குழப்பமடைந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
அவற்றை காண நுழைவுக் கட்டணமாக, இந்தியரிடம், தலா 40 ரூபாய், சர்வதேச பயணியரிடம், தலா 600 ரூபாய் என, தொல்லியல்துறையின் வசூலித்து வருகின்றனர். ஓரிடத்தில் பெறும் நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்பங்களையும் காணலாம்.
