திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13ல் தொடக்கம்: மாலை 4:00 மணிக்கு கவுனி தாண்டுகிறது
சென்னை:ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில், திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் 13ம் தேதி தொடங்குகிறது. திருக்குடைகள் மாலை 4:00 மணிக்கு கவுனி தாண்டுக்கின்றன.
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது, ஏழுமலையான் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.



