இரு வேறு விபத்துகள்: அசாமில் 7 பேர் பலி
தேஜ்பூர்: வடகிழக்கு மாநிலமான அசாமின் சோனித்பூர் மற்றும் பிஸ்வநாத் மாவட்டங்களில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்தனர். சோனித்பூர் மாவட்டத்தின் பாலிபாரா பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே கார் மற்றும் லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில், ஐந்து பேர் பலியாகினர். இறந்தவர்கள் அனைவரும், காரில் பயணித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு விபத்தில், பிஸ்வநாத் மாவட்டத்தின் கச்மாரி பகுதியில் அதிவேகமாக சென்ற பைக், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவர் உயிரிழந்தனர்.
குல்காம்: ஜம்மு - காஷ்மீரில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, 'லஷ்கர் - இ - தொய்பா'வின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உதவும் உள்ளூர் நபர்களின் 10க்கும் மேற்பட்ட இடங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று சோதனை நடத்தினர். குப்வாரா, குல்காம், பந்திபோரா, பாரமுல்லா உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திரிபுரா உள்ளூர் தேர்தல்:திப்ரா மோதா கட்சி வெற்றி

