ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடிய இரண்டு பேர் கைது
ஆவடி: ஆவடி, அம்பத்துார், கெருகம்பாக்கம், பகுதிகளில், சாலையோரம் நிறுத்தப்படும் ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடிய, இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த அண்ணனுார், ஜோதி நகரைச் சேர்ந்தவர் சவர்ராய், 65. கடந்த 13ம் தேதி, அண்ணனுார் ரயில்வே கேட் அருகே நிறுத்தியிருந்த அவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் திருடு போனது.
புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார், 'சி.சி.டி.வி.' காட்சிகளை ஆய்வு செய்து, சென்னை ஐ.சி.எப்., காலனியைச் சேர்ந்த சூர்யா, 45, என்பவரை கைது செய்தனர்.
