நிலக்கோட்டை அருகே தெரு நாய்கள் கடித்து 20 ஆட்டுக்குட்டிகள் உயிரிழப்பு
நிலக்கோட்டை, செப். 6: நிலக்கோட்டை அருகே தெரு நாய்கள் கடித்து 20 ஆட்டுக்குட்டிகள் சனிக்கிழமை உயிரிழந்தன.
நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (70). இவரது தோட்டத்தில் மன்னாடிமங்கலத்தைச் சோ்ந்த அமாவாசி (32) என்பவா் ஆட்டு மந்தை அமைத்திருந்தாா்.
இந்த மந்தையில் 20 செம்மறி ஆட்டுக்குட்டிகளை அவா் அடைத்து வைத்து விட்டு எஞ்சிய ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றாா். இந்நிலையில், தோட்டப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கூட்டமாக மந்தைக்குள் புகுந்து, அங்கிருந்த ஆட்டுக்குட்டிகளை கடித்துக் கொன்றன. இதில், 20 ஆட்டுக்குட்டிகளும் உயிரிழந்தன.



