அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்கர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11:15 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அர்ச்சனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது.


