காவிரி தொழில்நுட்ப பிரிவு பொறியாளர் நியமனத்துக்கு தொடரும் முட்டுக்கட்டை
சென்னை: காவிரி தொழில்நுட்ப பிரிவுக்கு தலைமை பொறியாளரை நியமிக்கும் நீர்வளத் துறையின் முயற்சிக்கு, நிதித்துறை முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
காவிரி உள்ளிட்ட பன்மாநில நதிநீர் பிரச்னைகளை கையாள, காவிரி மற்றும் பன்மாநில நதிகள் பிரிவு, 1990ம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இப்பிரிவில், சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் 33 பேரும், டில்லியில் ஐந்து பேரும் பணியாற்றி வருகின்றனர். இப்பிரிவு வாயிலாக, தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

