மனித மாமிசம்! -கூடுவாஞ்சேரி பயங்கரம்!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவில்லா பெட்டியிலிருந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி, மோசமான துர்நாற்றம் வீசியதால் பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், ஆக்ரா ரயில் நிலையத் தில் ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது சிவப்பு நிற ட்ராலி சூட்கேஸ் தனியேயிருக்க, அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அதை ரயில்வே போலீசார் திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதில் பிளாஸ்டிக் கவர்களில் மனித மாமிசத் துண்டுகள், எலும்புகள், குடல், ஈரல் போன்றவை இருக்க, உடனடியாக விசாரணையை துவக்கினர். அந்த பிளாஸ்டிக் கவரில் சரவணா ஸ்டோர்ஸ் என்று தமிழில் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பிளாஸ்டிக் கவரிலும் தமிழில் எழுதப்பட்டிருக்க, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் அந்த ட்ராலி சூட்கேஸை வைத்திருக்கக் கூடுமென்று தெரியவந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாருடன் இணைந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்த ஆக்ரா ரயில்வே போலீசார், கண்ணாடி போட்ட ஓர் இளம்பெண்ணும், அவருடன் வந்த ஆணும் அந்த சிவப்பு நிற ட்ராலி சூட்கேஸை எடுத்து வருவதை கண்டறிந்தனர். தொடர்ச்சியாக அடுத்தடுத்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்ததில், அந்த நபர்கள் கூடுவாஞ்சேரியிலிருந்து வருவது தெரியவந்தது. உடனே கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு வந்த ஆக்ரா ரயில்வே போலீசார், தொடர்ந்து ஆய்வுசெய்ததில், ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வது பதிவாகியிருந்தது. அவர்களின் படத்தைக் காட்டி விசாரித்தபோதும் யாருக்கும் தெரியவில்லை. இப்படியாக 15 நாட்கள் கடந்த நிலையில், ஆக்ராவில் கண்டெடுக்கப்பட்ட மனித மாமிச வழக்கில், 18ஆம் தேதி தான் ஆக்ரா ரயில்வே போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு டிரான்ஸ்பர் செய்தனர். அதேபோல, கைப்பற்றிய மனித உடல் பாகங்களை ஆய்வகத்துக்கு அனுப்பிவிட்டு, மிச்சத்தை 72 மணி நேரத்தில் தகனம் செய்தனர். வழக்கும் முட்டுச்சந்தில் நிற்கும் நிலை!
அடுத்ததாக, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையையொட்டிய மசூதியருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வர, கூடுவாஞ் சேரி காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி அந்த வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, பிரியாணி செய்யும் டபராவினுள் மனித மாமிசம், துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அதன்மீது மசாலா மற்றும் திரவம் போன்று இருந்தது. அந்த டபராவை சிவப்பு நிறத்துணியால் சுற்றிக்கட்டியிருந் தனர். கைப்பற்றப்பட்ட மனித மாமிசத்தை உடற் கூராய்வுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் வந்த தகவல்படி, ஆக்ராவில் ரயிலில் கிடைத்த மனித உடல் உறுப்புகளும், இப்போது கைப்பற்றப்பட்ட மாமிசமும் ஒரே நபருடையது என்று விசாரணையில் தெரியவர, முடங்கிப்போன வழக்கை கூடுவாஞ்சேரி போலீசார் தட்டியெடுத்து விசாரணையை துவங்கினர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



