பகுத்தறிவை பரப்புவதாகக்கூறி பயிர்களை பிடுங்குகின்றனரே! குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வேதனை
மதுரை: 'சிலர் ஆன்மிகத்தை பரப்புவதாக களைகளை பயிரிடுகின்றனர். சிலர் பகுத்தறிவை பரப்புவதாகக் கூறி பயிர்களை பிடுங்குகின்றனர்'' என, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசினார்.
மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் நான்காம் தமிழ்ச் சங்க விழா நடந்தது. சங்கத் தலைவர் நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் துரை கருணாநிதி, திருவள்ளுவர் கழக மதிப்பியல் தலைவர் கமலை விஜயராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சாந்திதேவி வரவேற்றார்.
தஞ்சை பல்கலை முன்னாள் பேராசிரியர் பழனி அரங்கசாமி துவக்கி வைத்து பேசினார். ஆண்டு மலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வெளியிட, முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பெற்றார்.




